இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில்நிலநடுக்கம்-நிகோபார் தீவும் அதிர்ந்தது
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் பாண்டா அச்சே பகுதியை இன்று காலை நிலநடுக்கம் தாக்கியது.
அச்சே பகுதியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கதால் இப் பகுதி குலுங்கியது. மேலும் இதை நிகோபார் தீவுகளிலும் உணர முடிந்தது.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 என்ற அளவுக்குப் பதிவானது. ஆனால் இதனால் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2004ல் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் பாண்டா அச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications