மதுரை-தயாளு அம்மாள் திறக்கும் தயா மண்டபம்
மதுரை:மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தயா என்னும் திருமண மண்டபத்தை முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திறந்து வைக்க இருக்கிறார். இது முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் மண்டபம் என்று கூறப்படுகிறது.
மு.க.அழகிரியின் வீடு மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. இங்குதான் இந்த கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் மகன் பெயர் தயாநிதி.
தனது தாயாரின் பெயரையும் மகனின் பெயரையும் குறிக்கும் வகையில் அந்தப் பெயர்களில் வரும் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து (தயா)இந்த மண்டபத்திற்குப் பெயரிடப்பட்டிருப்பதால் இது அழகிரியின் மண்டபம் எனக் கூறப்படுகிறது.
இந்த மண்டபத்தில் மணமகன், மணமகள் ஆகியோருக்கு தனித்தனியாக ஏ.சி அறைகள் உள்ளது. இதுத் தவிர விருந்தினர்கள் ஓய்வெடுக்கவும் தனியாக 4 அறைகள் உள்ளன. கல்யாண மண்டபத்தின் சமையலறைகள் விசாலமாக நெரிசல் ஏற்படாமல் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண மகாலை வரும் ஆகஸ்டு 3ம் தேதி காலை 10 மணியளவில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்க உள்ளார்.
இந் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள், மதுரை மேயர் தேன்மொழி மற்றும் துணை மேயர் மன்னன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்யாண மண்டபத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதி ஆகியோர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications