கருணாநிதிக்கு அல்-உம்மா பெயரில் கொலை மிரட்டல்
கோவை:முதல்வர் கருணாநிதியை கொல்லப் போவதாக அல்-உம்மா பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள போஸ்ட் கார்டில்,
போலீஸ் தேர்வுக்கான வயது வரம்பை 24ல் இருந்து 29 ஆக உயர்த்த முதல்வர் கருணாநிதி மறுத்து வருகிறார். இதனால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை கடற்கரையில் சுதந்திர தின கொடியேற்றும்போது அவர் கொல்லப்படுவார்.
மேலும் 29ம் தேதி (மாதத்தை குறிப்பிடவில்லை) போலீஸ் தேர்வு நடக்கும்போது அங்கு குண்டு வெடிக்கும். ஒரு வாரத்தில் திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். இது அல்-உம்மாவுக்கு அல்லாவின் உத்தரவு என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் கோவை அல்-உம்மா அலுவலகத்தின் சீலும் உள்ளது (இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
இந் நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் சூளூர் பஞ்சாயத்துத் தலைவருமான பொன்முடிக்கும் இதே போன்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருப்பூர் நகராட்சித் தலைவருக்கும் 6 மாதங்களுக்கு இதே சீல் கொண்ட மிரட்டல் கடிதம் வந்தது. அதிலும் கருணாநிதியைக் கொல்லப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications