அடுத்த ராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர்
டெல்லி:புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக தற்போதைய துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தீபக் கபூர் நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஜோகீந்தர் ஜஸ்வந்த் சிங் உள்ளார். அவரது பதவிக்காலம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினெனன்ட் ஜெனரல் தீபக் கபூர் நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
தீபக் கபூரின் நியமனத்தை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தீபக் கபூர் இதற்கு முன்பு வடக்குப் பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்தார். தற்போது துணைத் தளபதியாக உள்ளார்.
தலைமைத் தளபதி பதவிக்கு மேற்குப் பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் தல்ஜீத் சிங், தென் பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஆதித்யா சிங் ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.
மேற்கண்ட மூன்று அதிகாரிகளுமே 1967ம் ஆண்டு ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள் ஆவர். மூன்று பேருமே இந்திய ராணுவ அகாடமியில் ஒன்றாக பயிற்சி பெற்றவர்களும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications