பெண் அதிகாரியை ஆபாச படமெடுக்க முயன்றுகத்தியால் குத்திய டிஸ்மிஸ் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு பயிற்சி நிலையத்தில் பெண் அதிகாரியை ஆபாச படம் எடுக்க முயன்று கத்தியால் குத்திய முன்னாள் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(37). இவர் சென்னையில் தீயணைப்பு துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நுங்கம்பாக்கத்தில் அரசு அலுவலக குடியிருப்பில் தங்கியிருந்தார்.

ஜெயக்குமார் பணிக் காலத்தில் வேலைக்கு குடிபோதையில் தான் வருவாராம். அதுமட்டுமில்லாமல் பெண் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பில் இருப்பவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பலமுறை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

Jayakumar

கடந்த மார்ச் மாதம் தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு நிலைய அதிகாரியாக வேலை பார்த்தபோது அங்கு பணிபுரிந்த துணை இயக்குனர் பிரியாவை ஆபாசமாக திட்டி, அவரிடம் தவறான முறையில் நடந்துள்ளார். இதற்காக ஜெயக்குமாரை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த டிஸ்மிஸை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் பிரியா, அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.

இதனால் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரின் டிஸ்மிஸ் உத்தரவு செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது.

பிரியாவின் கணவர் வருமான வரித் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

காலை 10 மணிக்கு வழக்கம்போல் சாதாரண உடையில் அலுவலகத்துக்கு வந்த பிரியா, அலுவலகத்தின் முதல் மாடியில் உடை மாற்ற சென்றார்.

சீருடையை மாற்றிக் கொண்டிருக்கும்போது, குளியலறைக்குள் மறைந்திருந்த டிஸ்மிஸ் ஜெயக்குமார் பிரியாவை படம் எடுக்க முயன்றார். ஆனால், பிளாஷ் ஒளியைப் பார்த்த ப்ரியா சந்தேகமடைந்து குளியலறையைத் திறந்தார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த ஜெயக்குமாரைப் பார்த்து கத்தினார். இதையடுத்து ஜெயக்குமார் ப்ரியாவை கத்தியால் குத்தினார்.

இதில் காயமடைந்த பிரியா அவரை தள்ளிவிட்டுவிட்டு வெளியில் ஓடினார். ஆனால், அப்படியும் விடாத ஜெயக்குமார் பிரியாவை விரட்டிக் கொண்டே வந்து மீண்டும் குத்த முயன்றார்.

ரத்தம் கொட்ட வெளியில் ஓடி வந்த ப்ரியாவைப் பார்த்து மற்ற ஊழியர்கள் உஷாராகி விரட்டி வந்த ஜெயக்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ப்ரியாவை ஆபாச படம் எடுத்து மிரட்ட நினைத்ததாகக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.

தாம்பரம் சானிட்டோரியம் தீயணைப்பு நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அத்தனை பேரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு டிஸ்மிஸ் ஆன ஒருவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்று தெரியவில்லை.

இதில் வேறு யாராவது சம்பந்தபட்டுள்ளார்களா என துறைரீதியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+