இங்கிலாந்தில் ஒண்டு குடித்தன ஹோட்டல்:இந்திய கிரிக்கெட் வீரர்கள் படும்பாடு
ங்கிலாந்து:இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் தங்களுக்கு தங்கும் வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி, 2வது டெஸ்டில் விளையாட நாட்டிங்ஹாம் நகருக்கு சென்றுள்ளது.
முதல் டெஸ்டி மழை செய்த புண்ணியத்தால் டிரா ஆனதால் இந்திய அணியின் மானம் காப்பாற்றப்பட்டது. இந் நிலையில் நாட்டிங்ஹாம் நகரில் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இந்திய அணி வீரர்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளின் அளவு 9க்கு 8 அடி என்ற திருவல்லிக்கேணி மேன்ஷன் ரூம் சைஸ் தான் இருந்ததாம்.
இதனால் அவர்களால் அறையில் உடற் பயிற்சி கூட செய்ய முடியவில்லையாம். மேலும் தங்கள் உடைமைகளைக் கூட வைக்க இடமில்லாமல் அவஸ்தைபட்டுள்ளனர்.
ரமேஷ் பவார் போன்ற சில வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம் போல இருந்ததாம். காற்றோட்டம் கூட இல்லையாம்.
வீரர்கள் பலரும் தங்கள் மனைவியினருடன் சென்றுள்ளதால் ரொம்பவே கஷ்டப்பட்டதாக அணியின் நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,
வீரர்கள் தங்கப் போகும் ஓட்டலைப் பற்றி முழுமையாக முதலிலேயே தகவல்களை பெற்ற பின்பு தான் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது அணி நிர்வாகத்தின் தவறு.
இந்திய வீரர்களும் அளவுக்கு அதிகமாக பொருட்களை எடுத்துச் செல்வதால் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்றார்.
முதல்ல ஜெயிச்சுட்டு வந்து குறை சொல்லுங்க! அப்புறம் பார்ப்போம்...












Click it and Unblock the Notifications