ராஜபக்ஷேவுக்கு எதிராக கொழும்பில் பேரணி
கொழும்பு:இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அரசுக்கு எதிராக கொழும்பில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி நடத்தினர்.
இலங்கை அரசில் அதிகரித்து வரும் ஊழல், மனித உரிமை மீறல்கள், அரசியல் குளறுபடிகள், எதிர்க்கட்சிகளை உடைக்கும் செயல் உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேரணிக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீரா, ஸ்ரீபதி சூரியராச்சி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பேரணியில் வந்தவர்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சியினரின் இந்தப் பேரணிக்கு போட்டியாக சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆளுங்கட்சி சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் ஆளுங்கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த இரு பேரணிகளால் தென் இலங்கையில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.












Click it and Unblock the Notifications