விலகிச் சென்ற காதலியை ஆட்சி வீசி கொன்ற நபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தன்னைவிட்டு விலகிய காதலியின் முகத்தில் ஆசிட் வீசிக் கொலை செய்தார் காதலன்.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த துரைராஜின் மகன் ராஜகுமாரி (18). இவர் கிண்டியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரை எம்ஜிஆர் நகர் சூசைப்பள்ளத்தைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்தார். முதலில் மணியை நம்பி காலத்துள்ளார் ராஜகுமாரி. ஆனால், பின்னர் தான் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றும் நபர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவருடன் பேசுவதை ராஜகுமார் தவிர்த்தார். ஆனாலும் ராஜகுமாரியை அவ்வப்போது வழிமறுத்து வந்துள்ளார் மணி. ஆனாலும் அவருடன் பேசுவதை ராஜகுமார் தவிர்த்துள்ளார்.

இந் நிலையில் அவரை வழக்கம்போல் வழி மறித்த மணி, கடைசியாகக் கேட்கிறேன். என்னைக் காதலிக்கிறாரா இல்லையா என்று மிரட்டியுள்ளார். நான் உன்னை விரும்பவில்லை என ராஜகுமார் பதில் தரவே, மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ராஜகுமாரி மீது வீசியுள்ளார்.

இதில் முகம், கை, கால் எல்லாம் வெந்துபோய் அலறினார் ராஜகுமாரி. அப்படியே மயங்கியும் விழுந்தார். இதையடுத்து மணியும் அவனது நண்பனும் பைக்கில் தப்பிவிட்டனர்.

போலீசாருக்கு தகவல் போய் அவர்கள் வந்து ராஜகுமாரியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

தலைமறைவாகிவிட்ட மணியை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடுரோட்டில் நடந்த இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+