பாக். அணு ஆயுத ஏவுகணை பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சக்தி படைத்த ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக ஏவி சோதித்தது.
பாபர் ஹதீப் 7 என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும். ஏற்கனவே இந்த ஏவுகணை கடந்த மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சோதிக்கப்பட்டுள்ளது.
சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பாபர் ஏவுகணை ரேடார்களின் கண்களுக்கு எட்டாத உயரத்தில் பறந்து எதிரிகளின் இலக்கைத் தாக்கக் கூடியது. தரையிலிருந்து ஏவப்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இது முதலில் ஏவி சோதிக்கப்பட்டது. அப்போது இதன் இலக்கு தூரம் 500 கிலோமீட்டராக இருந்தது. தற்போது 700 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications