பேன்ஸி செல் நம்பருக்கு 15 லட்சம் தந்த வாலிபர்!
லூதியானா:தனக்கு பிடித்தமான செல்போன் நம்பரை ரூ. 15.5 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் லூதியானைவை சேர்ந்த தொழிலதிபரின் மகன்.
பிரபல ஹட்ச் செல்போன் நிறுவனம் முக்கியமான விஐபி நம்பர்களை ஏலம் விடப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதற்கான ஏலம் போன் கான்பரசிங் மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி காலையில் ஆரம்பித்த ஏலம் மறுநாள் மாலை வரை நடந்தது.
ஏலத்தின் முடிவை ஹட்ச் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது. இதில் 97800 00000 என்ற செல்போன் நம்பருக்குத் தான் அதிமான போட்டி ஏற்பட்டதாம்.
இறுதி வரை 5 பேர் விட்டு க்கொடுக்காமல் போட்டி போட்டு விலையை ஏற்றி ஏலம் எடுக்க முயன்றுள்ளனர்.
கடைசியில் லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான அமீத் இந்த நம்பரை ஏலத்தில் எடுத்தார். அதற்காக இவர் கொடுத்த பணம் ரூ. 15.5 லட்சம்!.
இவர் பிரபல ஜவுளி ஆலை அதிபரின் மகன் ஆவார்.
இதுகுறித்து அமீர் கூறுகையில்,
இந்த நம்பரை ஏலம் எடுத்ததின் மூலம் ஒரு விஐபி ஆகிவிட்டேன். ஏலத் தொகை (ரூ.15.5 லட்சம்) எனது பாக்கெட் மணி தான். இருந்தாலும் ஏல நேரத்தில் கார்டில் காசு இல்லாததால் நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை கட்டினேன். அவர்களுக்கு திருப்பி கொடுத்து விடுவேன் என்றார்.
அப்பா சம்பாதிச்ச காசு.. இப்படியெல்லாம் போகனும்னு இருக்கு..












Click it and Unblock the Notifications