நெல்லையில் 4 போலீஸ் அதிகாரிகள் அதிரடிடிரான்ஸ்பர்: டிஐஜி கண்ணப்பன் உத்தரவு
நெல்லை:பணியில் அலட்சியமாக இருந்த 4 போலீஸ் அதிகாரிகளை நெல்லை டிஐஜி அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக டிஐஜி கண்ணப்பன் பொறுப்பேற்றவுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கக் கூடாது. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொது மக்களை அலைக்கழிக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார். தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நகரில் தொடர் கொள்ளை சம்பவங்கள் குறைந்தன. துப்பு துலங்காமல் இருந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் (இத்தனை நாட்கள் போலீசார் ேவண்டுமென்றே கைது செய்யாமல் இருந்துள்ளனர்).
இருப்பினும் நகரில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து டிஐஜி கண்ணப்பன் அந்த அதிகாரிகளை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ராமநாதபுரத்துக்கும், பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தூத்துக்குடிக்கும், குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் சிவஞானவேல் திருச்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சந்திப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் குமரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாலும் முறையாக பணியை செய்யாததாலும் இந்த நடவடிக்கைகைய டிஐபி எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications