கலிபோர்னியா விமான நிலையத்தில் ராக்கெட்எரிபொருள் வெடித்து 2 பேர் பலி
கலிபோர்னியா:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மொஜாவே விமான நிலையத்தில் ஏற்பட்ட ராக்கெட் வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கலிபோர்னிய பாலைவன பகுதியில் உள்ள இந்த மொஜாவே விமான நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
![]() |
இந்த விமான நிலையத்தில் விண்வெளி ராக்கெட்டுகள் மற்றும் விண்கலன்களை உருவாக்கும் பணிகள் இங்கு நடந்து வருகின்றன. முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களே இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் ஸ்கேல்ட் காம்போசிட் என்ற நிறுவனத்தில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனம் தனியார்துறையினர் உருவாக்கி வரும் ஸ்பேஸ்ஷிப் ஒன் என்ற விண் கலத்தை வடிவமைத்து வருகிறது.
இங்கு ராக்கெட்டின் எரிபொருளில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நைட்ரஸ் ஆக்ஸைட் வெடித்துச் சிதறியதில் 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
![]() |
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்னர்.
லாங்பீச் விமான நிலையத்தில் பதற்றம்:
இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங்பீச் விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பொருள் கிடந்ததால் வெடிகுண்டு பீதி பரவியது.
இதையடுத்து பணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது அது கம்ப்யூட்டர் விளையாட்டு சாதனம் என்று தெரியவந்தது.














Click it and Unblock the Notifications