பூஜை.. தீர்த்தம்.. மயக்கம்..: பெண்ணிடம்20 பவுன் அபேஸ் செய்த பெண்
மதுரை:வீட்டில் பூஜை நடத்துவதாகக் கூறி, தீர்த்தம் என்ற பெயரில் மயக்க மருந்து தந்து பெண்ணிடம் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார் ஒரு பெண்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்த குமார். இவரது மனைவி உஷா. வீட்டில் உஷா மட்டும் தனியாக இருத்தபோது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் தன்னை கல்கி பகவான் அவதாரம் என்று கூறியுள்ளார்.
வீட்டில் செல்வம் பெருக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தெய்வ நம்பிக்கை நிறைந்த உஷாவும் பூஜை நடத்துமாறு கூறி அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.
பூஜையில் வைக்க வீட்டில் இருக்கும் எல்லா தங்க நகைகளையும் கொண்டு வருமாறு அந்தப் பெண் கூறவே, அதை நம்பிய உஷா தனது 20 பவுன் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.
உடனே பூஜையை ஆரம்பித்தார் அந்தப் பெண். பூஜை முடிந்துவிட்டதாகக் கூறி தீர்த்தம் கொடுத்தார். ஆனால், அதைப் பருகிய உஷா அடுத்த நிமிடமே மயக்கமானார்.
கண் விழித்துப் பார்த்தபோது கல்கி பகவான் பெண்மணி காணாமல் போயிருந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications