ராணுவ செயற்கைக் கோளை ஏவும் இந்தியா!!
டெல்லி:வல்லரசு நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவ பயன்பாட்டுக்காக தனி செயற்கைக்கோளை ஏவத் திட்டமிட்டுள்ளது.
வளர்ந்த வல்லரசு நாடுகள் உளவு பார்ப்பதற்காக ராணுவ செயற்கைக் கோள்ககளை ஏவி வருகின்றன.
இந் நிலையில் இந்தியாவும் தனக்கென ஒரு ராணுவ செயற்கைக்கோளை ஏவத் திட்டமிட்டுள்ளது.
கார்டோசாட்-2ஏ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ந்த செயற்கைக் கோள் ஏவப்படும். இதன் மூலம் அண்டை நாடுகளை கண்காணிக்க முடியும்.
கார்டோசாட் செயற்கைக்கோளுடன், இஸ்ரேலின் ராணுவ செயற்கைக்கோளான போலாரிஸையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. இஸ்ரோ செலுத்தும் 3வது வெளிநாட்டு செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டோசாட் செயற்கைக்கோளில் அதி நவீன கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை பெற முடியும்.












Click it and Unblock the Notifications