ஆக.15 முதல் தபால் அலுவலகங்களில் ரயில் டிக்கெட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து தபால் நிலையங்களில் ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்.

இதற்கான ஒப்பந்தத்தில் இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது லாலு கூறுகையில்,

முதல் கட்டமாக நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள 32 தபால் அலுவலகங்களில் இத் திட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தபால் அலுவலம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்.

2ம் வகுப்பு படுக்கை மற்றும் அமரும் வசதியுள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்தால் டிக்கெட்டிற்கு ரூ.15ம், மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் உட்காரும் வசதியுள்ள ஏசி டிக்கெட்டிற்கு ரூ.20ம், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.30ம் சர்வீஸ் தொகையாக வசூலிக்கப்படும்.

பயணச்சீட்டை கேன்சல் செய்தால் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இத் திட்டம் தமிழ்நாடு, ஒரிஸ்ஸா அஸ்ஸாம், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.

தபால் அலுவலகங்களில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் தரப்படும். ராணுவ வீரர்களுக்கான வெளச்சர் மற்றும் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தபால் அலுவலகங்கள் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளாலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+