பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 இந்து முன்னணியினருக்கு திமுகவினர் அடி-உதை!

Subscribe to Oneindia Tamil

கரூர்:கரூரில் மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்த 3 பேரை, திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்து அடித்து, உதைத்தனர்.

ராமர் பாலத்தை இடிப்பதில் அமைச்சர் டி.ஆர்.பாலு பிடிவாதமாக இருப்பதாகவும், அவர் இன்று கரூருக்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் கரூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராசா அறிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், நெடுஞ்சாலை ஆய்வுப் பணிக்காக கரூர் வருகை தர உள்ளார் டி.ஆர்.பாலு. ராமர் பாலத்தை இடித்தே தீருவேன் என்றும், ஆட்சி அதிகாரம் இருப்பதால் எதையும் செய்வேன் என்று கூறும் பாலுவுக்கு பாடம் புகட்ட மாபெரும் கறுப்பு கொடி பேராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந் நிலையில் இன்று மாலை கரூர் வந்தார் பாலு. கரூர்-வேலூர் இடையிலான நான்கு வழிச் சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர் கரூர் நோக்கி அவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலாயுதம்பாளையம், நாலு ரோடு சந்திப்பு என்ற இடத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மூன்றே மூன்று பேர் கருப்புக் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாபெரும் பேராட்டம் நடத்தப்படும் என ராசா கூறியிருந்தாலும் 3 பேர் மட்டுமே பேராட்டத்துக்கு வந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடி அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். மூன்று பேரும் தப்பி ஓடி விட முடியாத அளவுக்கு திமுக தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால் மூன்று பேருக்கும் சரியான அடி விழுந்தது.

பின்னர் திமுகவினரிடமிருந்து எப்படியோ தப்பி மூன்று பேரும் அங்கிருந்து ஓடினர்.

தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள் திமுகவினரும் கலைந்து ஓடி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+