For Daily Alerts
Just In
ஆட்டோவிலிருந்து இறங்கிய மாணவி பஸ் மோதி பலி
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கீழே விழுந்த குடையை எடுக்க ஆட்டோவிலிருந்து இறங்கிய 11 வயது மாணவி, வேகமாக வந்த மினி பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.
தஞ்சையை அடுத்த மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்.இவரது மகள் ஐஸ்வர்யா (11). இவர் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் ஆட்டோவில் சென்ற போது அவரது மடியில் இருந்த குடை தவறி கீழே விழந்து விட்டது. இதனால் குடையை எடுக்க ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் ஓன்று ஐஸ்வர்யா மீது மோதியது. அதில் ஐஸ்வர்யா படுகாயமடைந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் ஆட்டோவில் பயணித்த சக மாணவிகள், ஐஸ்வர்யாவின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Comments
Story first published: Wednesday, May 2, 2007, 5:30 [IST]