ஏ.டி.எம் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ்வங்கிகள் முடிவு - கஸ்டமர்களுக்கு புது சிக்கல்!
டெல்லி: ஒரே மாதத்தில் ஆறு முறைக்கு மேல் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால், அதற்கு சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டும் என வஙகிகள் முடிவு செய்துள்ளன. இதனால் டெபிட் கார்டு வைத்திருப்போர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் நமது வங்கிக் கணக்கில் உள்ள 10 ரூபாயை எடுப்பதாக இருந்தாலும் கூட வங்கிக்குச் சென்று டோக்கண் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து பின்னர்தான் பணத்தை வாங்கிச் செல்ல முடியும்.
ஆனால் ஏடிஎம் எனப்படும் எனி டைம் டெல்லர் மெஷின் முறை வந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரே நேரத்தில், சில விநாடிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை கூட எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
இப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு எனப்படும் டெபிட் கார்டுகள் வைத்திராத நபர்களே இல்லை எனும் அளவுக்கு அனைவரிடமும் கார்டுகள் உள்ளன. வங்கிகளில் போய் கால் கடுக்க காத்திருந்த பணம் எடுப்பதற்குப் பதில் இப்போது சொடுக்கு போடும் நேரத்தில் பணத்தை சுலபமாக எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஏடிஎம் கார்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 99 சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இப்போது இதற்கு ஆப்பு வந்து விட்டது. ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு வங்கிகள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன.
அதாவது, இனிமேல் மாதத்திற்கு 6 முறைதான் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியுமாம். அதற்கு மேல் எத்தனை முறை நீங்கள் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கிறீர்களோ, ஒவ்வொரு முறையும் தலா 15 ரூபாயை உங்களது கணக்கிலிருந்து வங்கி பிடித்தக் கொள்ளும். அதாவது அது சர்வீஸ் சார்ஜாம்.
இந்த புதிய முறையை அனைத்து வங்கிகளும் அமல்படுத்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், சேவை கட்டண விதிப்பு எதுவாக இருந்தாலும் முதலிலேயே வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் உள்ளது.
எனவே புதிய கட்டண முறை குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவித்து, குறிப்பிட்ட கால அவகாசம் அளித்த பிறகே அமலுக்கு வரப்படும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடு குறித்து அரசு வங்கியின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறை அமல் படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும், ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்வதை உபயோகப்படுத்துவர். ஏனெனில் அதற்கு கட்டணம் கிடையாது.
அதேபோல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்குவதும் இனி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்பு இப்படித்தான் நமது பணத்திலிருந்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வரி விதிக்கப்படும் என முன்பு ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால் மக்களிடையே அதற்கு கடும் கொந்தளிப்பு எழுந்தது. பின்னர் இந்த அளவு ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இப்போது ஏடிஎம் கார்டுகளுக்கு ஆப்பு வைக்க கிளம்பியுள்ளனர். இதை மக்கள் எப்படி எதிர்க்கப் போகிறார்களோ?
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications