டாடா ஆலை-மக்களிடம் கருத்து கேட்ட விஜயகாந்த்
நெல்லை:நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவிருக்கும் டாடா தொழிற்சாலை குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்க அப் பகுதியில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலையை அமைக்க கடந்த மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
ஆனால், இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மக்களிடையே எதிர்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியில் பல கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார்.
சாத்தான்குளம் வந்த அவர் டாடா தொழிற்சாலை அமையவிருக்கும் பகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்டார்.
பின்னர் நெல்லை மாவட்டம் குட்டம் பகுதி மக்களை அவர் சந்தித்தார்.
இதையடுத்து அறிக்கை தயார் செய்து முதல்வர் கருணாநிதியிடம் விஜயகாந்த் கொடுப்பார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே பொது மக்களிடம் கருத்துக் கேட்க சாத்தான்குளத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் நாளை வரவுள்ளார்.












Click it and Unblock the Notifications