மசாஜ் கிளினிக்கில் விபச்சாரம்- 4 கேரள பெண்கள் கைது
சென்னை:சென்னை கே.கே.நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த 4 இளம் பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் கே.கே.நகர் பகுதியில் டாக்டர் வி.விஜயலெட்சமி பி.ஏ.எம்.எஸ் என்ற பெயரில் ஆயுர்வேத கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கிளினிக்கில் மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தகவல்கள் வந்தன.
இதையடுத்து கேகே நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் கஸ்டமர் போல அங்கு சென்றார்.
கிளினிக்கின் உரிமையாளர் அந்தோணி, ரூ.500 பெற்றுக்கொண்டு தனி அறைக்கு ஒரு பெண்ணோடு அனுப்பினார்.
அந்த பெண் அரைகுறை உடையில் இருந்தார். உள்ளே சென்றவுடன் அந்த காவலரிடம் உல்லாசமாக இருக்க இன்னொரு 500 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து தனது அதிகாரிகளுக்கு தகவல் தந்து போலீசாரை வரவழைத்தார் காவலர்.
அவர்கள் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ரகீதா(21), ஆயிஷா(20), எஸ்தர்(20) மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த எலிசபெத்(25) ஆகியோரை கைது செய்தனர்.
அந்தோணியும் கைது செய்யப்பட்டார்.
கைதான அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications