தமிழகம்-கேரளா லாரி சண்டை:லாரிகள் பறிமுதல், டிரைவர்கள் கைது
திருவனந்தபுரம்:மணல் கடத்தும் கேரள லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதால், அதிக எடையை ஏற்றி வருவதாக தமிழக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது கேரள அரசு.
![]() |
தமிழ்நாட்டிலிருந்து தினமும் பல ஆயிரம் லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந் நிலையில் தமிழக அரசு மணல் கடத்தும் லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதன் எதிரோலியாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கேரள மாநில லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரைவர்-கீளினர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு கேரள லாரி உரிமையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
![]() |
இதற்கு பதிலடியாக ஓவர் லோடு காரணமாக சாலைகள் சேதம் அடைவதாகக் கூறி அம் மாநில தமிழக லாரிகளுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் வேயிங் பிரிட்ஜுக்கு (எடை பார்க்கும் கருவி) வந்து செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆரியங்காவு முதல் புளியரை வரை தேங்கி நிற்கின்றன.
இந் நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் வரும் தமிழக லாரிகள் ஓவர் லோடு ஏற்றி வந்தால் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்று கூறி கேரள லாரி உரிமையாளர்கள் சோதனைச் சாவடி அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனால் ஏராளமான டேங்கர் லாரிகள் கேரளாவுக்குள் நுழையாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.















Click it and Unblock the Notifications