ஆதரவை வாபஸ் பெற தைரியம் உண்டா?இடதுசாரிகளுக்கு பிரதமர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பதவியை விட்டு விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என பாஜகவும், மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. மேலும் மூன்றாவது அணியும் கடுமையாக எதிர்க்கிறது.

இதனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து பாஜக, மூன்றாவது அணியுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளும் நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பவுள்ளனர்.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என 184வது பிரிவின் கீழ் பாஜக கோரவுள்ளது. ஆனால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாத நிலையில் ஓட்டெப்பு நடத்தினால் பாஜக-3வது அணி கூட்டணி தான் வெல்லும்.

இதனால் அரசே கவிழும் நிலை உருவாகும். இதையடுத்து ஓட்டெப்பு நடத்துவதில்லை, வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந் நிலையில் இடதுசாரிகள் தன்னை முதுகில் குத்திவிட்டதாக வருத்தம் அடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக தன்னை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பர்தானிடம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

மேலும் வேண்டுமானால் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் சிங் கூறியுள்ளார்.

ஆனால், இதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறுத்துள்ளார். பிரதமர் அப்படியெல்லாம் கூறவில்லை என்ற அவர், எங்களது எதிர்ப்பு நிலையிலும் மாற்றமில்லை என்றார்.

இதனால் பாஜக நெருக்கடியால் இந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தால் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிடும் என்று கூறப்படுகிறது.தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+