நாளை சோனியா வருகை-மதுரையில் தீவிர பாதுகாப்ப
மதுரை:நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மானாமதுரை-ராமேசுவரம் அகல ரயில் பாதையை துவங்கி வைக்க மதுரைக்கு வருவதையொட்டி நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சி மதுரைக்கு மாற்றப்பட்டது. நாளைய தினம் ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரத்தில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். இதனால் சோனியாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் உருவாகும் என்பதால் நிகழ்ச்சி மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அகல ரயில் பாதையை சோனியா திறந்து வைக்கிறார். இதனால் மதுரை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்பே மதுரை நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.
வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் குழுவினர் மருத்துவக் கல்லூரி வளாகத்தை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோக்கள் இன்று காலை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டனர். மேலும் ஹெலிகாப்டர்களும் வான்வழி கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலு, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்












Click it and Unblock the Notifications