For Daily Alerts
Just In
மின் வாரியத்துக்கு உள்ளாட்சி மன்றங்களின்அபராத வட்டி தள்ளுபடி: முதல்வர் உத்தரவு
சென்னை:தமிழகத்தின் உள்ளாட்சி மன்றங்கள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய அபராத வட்டித் தொகையை தள்ளுபடி செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
உள்ளாட்சி மன்றங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தின் நிலுவைத் தொகை மீது விதிக்கப்படும் அபராத வரி ரூ.31.41 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்ளாட்சி மன்றங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையைக் குறைத்து சலுகை வழங்கியதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட ரூ. 50 கோடி இழப்பை மானியமாக வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, August 14, 2007, 5:30 [IST]