6 அமாவாசைக்குள் திமுக ஆட்சி அவுட்: அதிமுக
கரூர்:கரூர் நகராட்சியில் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக உண்ணாவிரத பந்தலுக்கு முன்பு திமுகவினரும் போராட்டத்தில் குதித்ததால் பதட்டம் உருவானது.
இதனால் அதிமுகவினரின் உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இனாம் கருர் நகராட்சியில் சாலை, மின்சாரம், குடிநீர்,போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி தர வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கருரில் நேற்று அதிமுக சார்பில் இனாம் கருர் நகராட்சியை கண்டித்து வெங்கமேடு அண்ணா சிலை அருகில் 500 க்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு துனை செயலாளர் சின்னசாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
திமுக தரப்பு எத்தகைய தொந்தரவு கொடுத்தாலும் அதை சமாளிக்க எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் கருர் எஸ் நாகராசன் தலைமையில் ஒரு படை தயார் செய்து ரகசியமாக வைத்திருந்தனர்.
இருப்பினும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் உண்ணாவிரதம் அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சின்னசாமி,
இன்னும் 6 அமாவாசைக்குள் திமுக ஆட்சி கவிழம், மக்கள் பிரச்சனைக்கு கூட போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. போலீஸ் இரட்டை வேடம் போடுகின்றனர். இன்னும் சில நாட்களில் டெல்லி ஆட்சியும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சியும் கவிழும் என்றார்.












Click it and Unblock the Notifications