அமைச்சரின் உறவினர் வீட்டுக்கு கற்களுடன்வந்த ஜெலட்டின் குச்சிகள்!
நெல்லை:அமைச்சரின் உறவினர் கட்டி வரும் வீட்டுக்கு கற்களுடன் ஜெலட்டின் குச்சிகளும் வந்திறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டவுன் குற்றாலம் ரோட்டை சேர்ந்தவர் ஷாமியா. அமைச்சர் டி.பி.எம். மைதீன் கானின் உறவினரான இவர், அப் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக தாழையூத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து லாரி மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டன.
கற்களை கட்டிட தொழிலாளர்கள் எடுத்தபோது கற்களுக்கிடையே ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு துணை கமிஷ்னர் தினகரன், இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, சப்.இன்ஸ்பெக்டர்கள் குருசாமி, முருகேசன் ஆகியோர் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் கருவிகளுடன் அங்கு வந்தனர்.
அங்கிருந்த 3 ெஜலட்டின் குச்சிகளை அகற்றி பின்னர் அவற்றை திருவேங்கடநாதபுரம் அருகேயுள்ள மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
கற்களுக்குள் ஜெலட்டின் குச்சிகள் தற்செயலாக வந்ததா அல்லது ஏதேனும் சதிச் செயலா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications