தேமுதிக கூட்டத்தில் பெரும் ரகளை;நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து!
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில் அடிதடி, கலாட்டா, சோடா பாட்டில் வீச்சு நடந்தது. இதில் இலக்கிய அணி செயலாளர் பஞ்சுவை, பீர் பாட்டிலை உடைத்துக் குத்தினர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட தேமுதிக கூட்டம் தேவிப்பட்டினம் சாலையில் உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னா தலைமை தாங்கினார்.
நகர ஒன்றிய அணி செயலாளர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் சின்னாவிற்கு எதிர் கோஷ்டியினர் திடீரென கூட்டத்திற்குள் புகுந்தனர்.
கூச்சலிட்டவாறு உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த சேர்களை தூக்கி வீசினர். பின்னர் சோடா பாட்டில்களை சரமாரியாக வீசினர். ராக்கெட் போல பறந்து வந்த பாட்டில்களால் அந்த இடமே ஈராக் போல காணப்பட்டது. மாவட்ட அலுவலத்தையும் அந்தக் கும்பல் சூறையாடியது.
மோதலின் உச்சகட்டமாக மாவட்ட செயலாளர் சின்னா, கலை இலக்கிய அணி செயலாளர் பஞ்சு ஆகியோர் மீது பீர் பாட்டிலை உடைத்து குத்தினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். பதட்டம் நிலவியதால் அஙகு போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications