காங்கிரசுக்கு மிரட்டல் விடுக்கும் மாயாவதி
லக்னெள:மாநிலங்களுக்குரிய கோரிக்கையை புறக்கணித்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார்.
![]() |
லக்னெளவில் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உத்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டம் மூலம் நிதி உதவி தருமாறு மத்திய அரசை கேட்டுள்ளேன். இதற்காக கடந்த மூன்று மாதத்திற்குள் இரு முறை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருக்கின்றேன்.
பிரதமர் இதுகுறித்து எந்த பதிலையும் தெரிவிக்காததால், மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி உள்ளேன்.
மாநிலத்தின் நிதிக்காக பலமுறை கேட்டும் காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இப்படி செய்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகும் நிலை ஏற்படும். பின்னர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாங்களே போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும்.
பகுஜன் சமாஜ் கட்சி இப்போது மாநிலங்களில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியாக இருக்கிறது. பல மாநிலங்களில் செல்வாக்கு பெருகி வருகிறது. எதிர்காலத்தில் நாங்கள் கண்டிப்பாக மத்திய ஆட்சியை பிடிப்போம்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சியை புறக்கணித்தது தவறு என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கும் நிலை ஏற்படும் என்று மாயாவதி காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை மாயாவதி வெளியில் இருந்து ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications