உளவுப் பிரிவால் தடுக்கப்பட்ட அசம்பாவிதங்கள்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:உளவுத்துறையின் தகவல்கள் மூலம் தான் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறமால் தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முகர்ஜி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

காவல்துறையில் 13,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மதரீதியான மோதல்கள் நடக்கவில்லை. உளவுத்துறை தகவல்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உளவுத் தகவல்கள் மூலம் பல்வேறு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கிறது. இதற்காக அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது என்றார் முகர்ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+