திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் லோக் அதாலத்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இரண்டு நாள் லோக் அதாலத் நேற்று காலை துவங்கியது. இதில் 227 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தங்களின் பாஸ்போர்ட் பிரச்சனையைத் தெரிவித்தனர்.
அவர்களுடைய குறையை உடன் நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் கால தாமதமாகும் பாஸ்போர்ட் விநியோகத்திற்கும் உடனடி தீர்வுகானும் விதமாக இன்றும் லோக் அதாலகத் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications