ஆஜ்மீர் தர்கா கமிட்டியில் ஆற்காடு இளவரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்கா உறுப்பினர் குழுவில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி இடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆஜ்மீர் தர்கா. இந்த தர்காவின் நிர்வாகக் குழு 9 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது இந்தக் குழுவில் ஆற்காடு இளவரசர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அரசு உத்தரவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு, தர்கா வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
மேலும் ஆஜ்மீக் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தும். இந்தக் குழு ஐந்து ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும்.












Click it and Unblock the Notifications