இந்தியாவில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்தும் டயோடா
டெல்லி:விரைவில் இந்தியாவில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த டயோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை பெரிய ரக கார்களையும் சொகுசு கார்களையும் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டயோடா. ஆனால், சிறிய கார்களுக்கு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மார்கெட் டயோடாவை புதிய பாதையில் திசை திருப்பியுள்ளது.
சிறிய ரக கார்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பதோடு அல்லாமல், அவற்றை பிற நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யவும் டயோடா திட்டமிட்டுள்ளது.
டயோடாவின் கார் தயாரிப்புப் பிரிவு பெங்களூர் அருகே உள்ளது. இங்கு ஆண்டுக்கு 60,000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை விரிவாக்கவும் டயோடா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை தயாரிக்க முடியும்.
டயோடாவின் சிறிய ரக கார் மாருதி 800 மற்றும் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ள ரூ. 1 லட்சம் பிளஸ் மதிப்புள்ள கார்களுக்கு போட்டி தரும் வகையில் அமையும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications