சங்கிலித் திருடனை சரமாரியாக அடித்துஉதைத்த போலீஸ், பொது ஜனம்!
பீகார்:பீகார் மாநிலத்தில் பெண்ணிடம் சங்கிலி திருடிய நபரை, போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
![]() |
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு நபர் சங்கிலி பறித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர்.
பின்னர் அந்த நபரின் கைகளை முதுகில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆளாளுக்கு கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்தது போலீஸ்.
![]() |
பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்பதற்குப் பதிலாக போலீஸாரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த திருடனை ஒரு பைக்கில் கட்டினர். பின்னர் அந்த பைக்கை ஒரு போலீஸ்காரர் ஓட்டிச் சென்றார். அந்த பரிதாபத்துக்குரிய திருடனோ, தரையில் உரசியபடி பரிதாபமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
திருடனிடமிருந்து சங்கிலியை மீட்ட பின்னரும் கூட, அந்த நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து பீகார் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.
பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறுகையில்,
பைக்கில் திருடனைக் கட்டி தெருவில் இழுத்துச் சென்ற போலீஸ்காரரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார். அந்த காவல்துறை அதிகாரி ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் பீகார் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், பீகாரில் காட்டாட்சி நடக்கிறது. அதற்கு இது சரியான உதாரணம்.
இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடானதாகும். சிறிய திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் கொலை முயற்சிக்கு சமமானது.
நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சட்டம், ஒழுங்கை கடைபிடிக்க தவறிவிட்டது என்று லாலு கூறியுள்ளார்.















Click it and Unblock the Notifications