நடிகை சரஸ்வதி கூட்டத்தில் திமுகவினர் ரகளை

Subscribe to Oneindia Tamil

திருவிடைமருதூர்:நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டு பேசிய அதிமுக கூட்டத்தில் திமுகவினர் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

பாக்யராஜ் கட்சி நடத்தியபோது அதில் முக்கிய தலைவியாக இருந்தவர் சரஸ்வதி. பின்னர் மதிமுகவுக்குப் போய் இப்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

இந் நிலையில் திருவிடைமருதூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்திற்கு சோழபுரம் நகர செயலாலர் ஆசாஷ் அலி தலைமை தாங்கினார். அதிமுக பேச்சாளரும், நடிகையுமான சி. ஆர். சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் சின்னையன் என்பவர் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒரு கும்பல் அப் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுக்களை உருட்டுக்கட்டைகளால் அடித்து உடைத்து.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்களை அதிமுகவினர் பிடிக்க முயன்றனர். அவர்களையும் கட்டையால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் அதற்குள் தப்பி ஓடி விட்டது.

இதுகுறித்து அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

ரகளையில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாக கைது செய்யக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ரொசரியோ, திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததயைடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+