டிவி பார்க்கத் தடை: மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:டிவி பார்க்க பெற்றோர் தடுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகள் லட்சுமி, 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை டிவி பார்க்க கூடாது என்று பெற்றோர் கூறியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசியில் ..
தென்காசி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சர்க்கரை நோயால் அவதி பட்டு வந்தார். இந்த நிலையில், ஆற்றில் குளிக்க சென்ற சரஸ்வதி, ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.
பேட்டையில் ..
நெல்லை, பேட்டை சுத்தமல்லி அருகேயுள்ள திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராமசுப்பு அய்யர் மனைவி ரஞ்சிதம். அப்பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்ற போது ஒரு சரக்கு ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications