ரெட் எப்.எம்பின் 49% பங்குகள் சன் டிவி வசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:வட இந்தியாவில் செயல்பட்டு வரும் ரெட் எப்.எம். வானொலியில் 48.9 சதவீத பங்குகளை சன்டிவி குழுமம் வாங்கியுள்ளது. சன் டிவியின் துணை நிறுவனமான தெற்காசிய எப்.எம். நிறுவனம் மூலம் இந்த பங்கு மாற்றம் நடந்துள்ளது.

ரெட் எப்.எம். நிறுவனத்தின் கணிசமான பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளதன் மூலம் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் தனது எப்.எம். சேவையை விரிவாக மேற்கொள்ளவுள்ளது சன் டிவி.

ரெட் எப்.எம். நிறுவனத்தின் புரமோட்டர்களான உஷா ரெட்டி, அர்ஜூன் ராவ் ஆகியோர் தொடர்ந்து 51.1 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். ரெட் எப்.எம். நிறுவனம் என்டிடிவியுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பங்கு மாற்றத்திற்குப் பதிலாக ரெட் எப்.எம். நிறுவனமும், என்டிடிவி நிறுவனமும், தெற்காசிய எப்.எம். நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ளும். மீதமுள்ள தெற்காசிய எப்.எம். நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்கள் வசம் தொடர்ந்த வைத்திருப்பார்கள்.

தெற்காசிய எப்.எம். நிறுவனத்திடம் இந்தியா முழுவதும் (தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா தவிர) 23 எப்.எம். ரேடியோ உரிமங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நிறுவனம் ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வரில் இரு ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+