சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.
ஓமலூர் அருகே உள்ளது பாகல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகள் மேகலா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழிகளோடு சேர்ந்த நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவிலின் பூசாரியான கோவிந்தசாமி மேகலாவை தோழிகளிடமிருந்து தனியாக அழைத்து கோவிலின் மேல் தளத்திற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் மேகலா உதவி கோரி கூச்சல் போட்டார். அதைக் கேட்ட பொது மக்கள் மேல் தளத்துக்குச் சென்றபோது, தன்னை பூசாரி பலாத்காரம் செய்ய முயன்றதை மேகலா தெரிவித்தார்.
இதையடுத்து கோவிந்தசாமியை தாக்கிய பொது மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications