பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்புbr/29 பேர் பலி - 60 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil


ராவல்பிண்டி:

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று காலை நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 29 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள நகரம்தான் ராவல்பிண்டி. இங்கு இன்று காலை அணு சக்தி ஆணைய அலுவலர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது.

இதில் அந்தப் பேருந்து முற்றிலும் தீக்கிரையானது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் நடந்த சில விநாடிகளில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்தது. இதில் 17 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

இரு சம்பவங்களிலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

அல்கொய்தா தீவிரவாதிகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+