பட்டங்களில் கையெழுத்துப் போட்டார் அன்புமணி!
டெல்லி:
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று கையெழுத்துப் போட்டார்.
எய்ம்ஸ் மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் எய்ம்ஸ் தலைவர் என்ற முறையில் அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கையெழுத்திட வேண்டும். ஆனால் எய்ம்ஸ் பதிவாளர் நியமனம் தொடர்பாக அன்புமணிக்கும், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக வேணுகோபால் அனுப்பிய பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திடவில்லை அன்புமணி. இதையடுத்து சமீபத்தில் மாணவர்களும், டாக்டர்களும் அதிரடியாக ஸ்டிரைக்கில் குதித்தனர்.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் ஸ்டிரைக் வாபஸானது. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் பட்டச் சான்றிதழ்களில் அன்புமணி கையெழுத்திட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தன்னிடம் அனுப்பப்பட்ட அனைத்துப் பட்டச் சான்றிதழ்களிலும் அன்புமணி கையெழுத்திட்டார். கையெழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications