செல்போனில் விபச்சாரத்துக்கு அழைத்த பெண்கள் கைது!

Subscribe to Oneindia Tamil


கன்னியாகுமரி:

செல்போன் மூலம் விபசாரத்திற்கு அழைத்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் கடை முனையான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இதை பயன்படுத்தி விபச்சாரம் அங்கு கொடி கட்டிப் பறக்கிறது.

சில ஏஜென்டுகள் மூலம் அழகிகள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு விபச்சாரம் நடந்து வருகிறது.

இந் நிலையில் கன்னியாகுமரி பகுதியில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடும் கும்பல் செயல்பட்டு வருவதாக தெரியவந்தது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அழகிகளான பெங்களூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த சாந்தி, ஆந்திராவைச் சேர்ந்த சந்திரகலா, திருவண்ணாமலையை சேர்ந்த ராணி, மற்றும் இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சரஸ்வதி அம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் சரஸ்வதி அம்மாள் ஒரு புரோக்கர். பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அழகிகளை சரஸ்வதி அம்மாள்தான் அழைத்து வந்து முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+