கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கட்டாய ஹெல்மட் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications