டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்;br/அன்புமணிக்கு மறுபடியும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil


டெல்லி:

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் அனைவரின் பட்டச் சான்றிதழ்களிலும் கையெழுத்துப் போடாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய மருத்து விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கும், அந்த கழகத்தின் தலைவர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் அன்புமணிக்கும் இடையே பெரும் பனிப் போர் நடந்து வருகிறது.

இந்த பனிப் போரின் விளைவாக எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்துப் போடாமல் வைத்திருந்தார் அன்புமணி.

இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக டாக்டர்களும் ஸ்டிரைக்கில் இறங்கினர். இதனால் 3 நாட்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஸ்தம்பித்துப் போனது.

பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பட்டச் சான்றிதழ்களில் அமைச்சர் அன்புமணி கையெழுத்திட உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 24 மணி நேரத்திற்குள் பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திட வேண்டும் என அன்புமணிக்கு உத்தரவிட்டது.

அதன்படி 49 மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் அன்புமணி கையெழுத்திட்டார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அனைத்து மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களிலும் அமைச்சர் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்தனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திடாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+