மதுரையில் பாமக பேனர்கள் அதிரடியாக அகற்றம்
மதுரை:
மதுரையில் பாமகவின் விளம்பர பலகைகளை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த விளம்பரப் பலகைகள் விவகாரத்தைக் கிளப்பியதே பாமக நிறுவன ராமதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவது தொடர்பாக மதுரை கலெக்டர் ஜவஹர், போலீஸ் கமிஷ்னர் நந்தகோபால், மாநகராட்சி ஆணையர் தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து போலீஸாரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விளம்பர பலகைகளை அகற்றிய வண்ணம் உள்ளனர். இந் நிலையில் பாமக சார்பில் வைக்கப்பட்டு இருந்த வாழ்வுரிமை மாநாடு டிஜிட்டல் பேனர்களையும் அதிகாரிகள் அகற்ற முயன்றபோது பாமகவினர் அங்கு வந்து குவிந்தனர்.
கலைஞர் டிவி விளம்பரம் உள்பட, பல விளம்பர பலகைகள் இருக்கும் போது ஏன் பாமக பேனரை மட்டும் அகறிற்றுகிறீர்கள் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் போலீசார் சமாதானம் பேசினர்.
ஆனாலும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து பாமக மூத்த தலைவர்களிடமிருந்து அவர்களுக்கு சில உத்தரவுகள் வரவே அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications