பிஸ்கட் கொள்ளையர்கள் கைவரிசைbr/ஒரிசா பயணியிடம் ரூ. 30,000 அபேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரிசா பயணிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணத்தைத் திருடும் கும்பல், ரூ. 30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டது.

சென்னை வரும் ரயில்களில் அவ்வப்போது மயக்க பிஸ்கட் கொடுத்து பொருட்கள், நகை, பணத்தைத் திருடும் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. சில நாட்களாக மறைந்திருந்த இந்த திருட்டுக் கும்பல் மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

ஒரிசாவைச் சேர்நதவர் பாபு என்கிற ஊத் பகத்கர் தாஸ். இவர் எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, மயங்கிய நிலையில் கிடந்தார் பாபு.

இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீஸார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த பாபு, தான் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தைக் காணவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தன்னுடன் வந்த சகோதரரையும் காணவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார். செப்டம்பர் 4ம் தேதி தானும், தனது சகோதரரும் ரயிலில் ஏறியதாகவும், அவர்களுடைய பெட்டியில் 2 பேர் பயணித்ததாகவும், தங்களுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுத்ததாகவும் பாபு கூறினார்.

பிஸ்கட்டை சாப்பிட்ட பின்னர் தான் மயங்கி விட்டதாக பாபு தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் காணாமல் போய் விட்ட பாபுவின் சகோதரர் மற்றும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+