காரில் சைரன்-திருமாவளவன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விதிமுறைகளை மீறி காரில் சிவப்பு விளக்குடன் கூடிய சைரன் வைத்துக் கொண்டு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி வேலூரில் இருந்து ஆரணிக்குச் சென்ற திருமாவளவனின் காரில் சிவப்பு விளக்கு சுழன்றது. சைரன் ஒலியுடன் அந்த கார் சென்றது. இதையடுத்து திருமா மீது வழக்கு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு நோட்டீசும் அனுப்பப்படவுள்ளது.
யார் யார் சைரனை பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக சமீபத்தில் உள்துறைச் செயலாளர் விளக்கமான சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications