பந்தத்துடன் 'சாமியாடிய' பெண்br/தீப்பிடித்து பரிதாப சாவு!

Subscribe to Oneindia Tamil


பர்கூர் (கிருஷ்ணகிரி)

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தீப் பந்தத்தை கையில் பிடித்தபடி சாமியாடிய பெண், அந்தத் தீப்பந்தம் மேலே விழுந்து தீப்பிடித்ததில் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

பர்கூர் அருகே உள்ளது கல்லத்துப்பட்டி கிராமம். இங்கு பேய் விரட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று இரவு நடந்தது.

விழாவில் பங்கேற்ற பலர் சாமி வந்து ஆடினர். அப்போது சிவகாமி, அஜீதா (37), அம்சவேணி ஆகியோர் கையில் தீப்பந்தத்தைப் பிடித்தபடி ஆடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, தீப்பந்தத்தில் இருந்த தீ இவர்கள் மீது பட்டது. இதில் மூன்று பேரின் சேலைகளும் பற்றி எரிந்தன. மூன்று பேரும் தீயில் கருகி கீழே விழுந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ந்த கூட்டத்தினர் மூன்று பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அஜீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற இரு பெண்கள் மற்றும் இவர்களைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த அஜீதாவின் கணவர் மணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+