நடு ரோட்டில் மாணவியிடம் வெறித்தனம்:br/முத்தமிட முயன்ற வாலிபர் கைது
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் மாணவி மீது கொண்ட காதல் மோகம் வெறியாக மாறி, நடு ரோட்டில் அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள மில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு அதே தெருவில் வசிக்கும் மாணவி கற்பகம் மேல் காதல் பிறந்தது. ஆனால் இது ஒரு தலைக்காதல்தான். பால்ராஜின் காதலை ஏற்க மறுத்து விட்டார் கற்பகம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் மாணவி கற்பகம் சாலையில் சென்று கொண்டு இருந்த சமயம் பார்த்து அவரை வழிமறித்து அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். மேலும் அவரது ஜாக்கெட்டையும் வெறி கொண்டு கிழித்துள்ளார்.
அலறி தவித்த கற்பகம் சத்தம் போடவே, சாலையில் சென்றோர் திரண்டு வந்து பால்ராஜின் பிடியிலிருந்து கற்பகத்தை மீட்டனர். பின்னர் கற்பகம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications