10,000 அமெரிக்க டாலருடன் வந்தbr/இரு விமான பயணிகளுக்கு அபராதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மலேசியா செல்ல வந்த இரு பயணிகள் சட்டவிரோதமாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை வைத்திருந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு அமர் குமார் (40), நவீன் குமார் (34) ஆகிய இருவரும் வந்தனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் செல்ல அவர்கள் வந்தனர்.
அப்போது அவர்களிடம் சுங்கத்துறை சோதனை நடந்தது. அந்த சோதனையின்போது கணக்கில் வராத 10 ஆயிரம் டாலர் அமெரிக்கப் பணம் இருப்பது தெரிய வந்தது.
அந்தப் பணத்திற்கு முறையான கணக்கு இல்லாததால், சுங்கத்துறை சட்டப்படி, அத்தொகையில் 50 சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மீதமுள்ள தொகையில் 10 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதையடுத்து இரு பயணிகளும் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications