நில மோசடி வழக்கு: முன்னாள் கலெக்டர் சாட்சியம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்த வழக்கில் முன்ளாள் கலெக்டர் சாட்சியம் அளித்தார்.
கடந்த 1996 ம் ஆண்டு புதுக்கோட்டையில் கனகராஜ் என்பவர் கிருஷ்ணகோனாருக்கு சொந்தமான நத்தம் பண்ணையில் இருந்த நிலத்திற்கு, போலியாக பத்திரம் தயாரித்து அரசுக்கு விற்றதாக லட்சுமி என்பவர் புகார் செய்தார்.
கிருஷ்ண கோனாருக்கு வாரிசு இல்லை. ஆனால் கனகராஜ் போலியான பத்திரம் தயாரித்து அதிகாரிகள் உதவியுடன் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடிக்கு அப்போதைய ஆர்டிஒ அறிவுக்கரசு, தாசில்தார் புகழேந்தி, விஏஒ பழனிவேல் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதீமன்றத்தில் நடந்து வருகின்றது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ளாள் புதுக்கோட்டை கலெக்டர் யசேந்திரநாத்
ஸ்வைன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.












Click it and Unblock the Notifications