காதலனுடன் இருந்த பெண் கடத்திக் கற்பழிப்பு
கோவை:
'பருத்தி வீரன்' பட ஸ்டைலில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து விட்டது.
கோவை போத்தனுரைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் கோவையைச் சேர்ந்த ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் ஆனந்த்
என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வேலை முடிந்த பின்பு அருகில் உள்ள இடங்களில் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்படிப் பேசும்போது மிகவும் தனிமையாக இருக்கும் இடமாக பார்த்துப் பேசுவார்களாம்.
சம்பவத்தன்று இருவரும் வேலை முடிந்த பின்பு அருகில் உள்ள வெள்ளலூர் அருகே தனிமையில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளிள் பின்தொடர்ந்து வந்த 4 பேர் ஆனந்தை கத்தியை காட்டி மிரட்டி தனியாக அமர வைத்து விட்டு செல்வியை காட்டிற்குள் அழைத்துச் சென்று ஒவ்வொருவராக சென்று கற்பழித்துள்ளனர்.
இதனால் செல்வி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர்கள் ஓடி விட்டனர். செல்வி எங்கிருக்கிறார் என்து தெரியாமல் பதறியபடி ஆனந்த் தேடியுள்ளார். அப்போது செல்வி ஒரு இடத்தில் நிர்வாண நிலையில் மயங்கிக் கிடந்தார்.
இதை கண்டு கதறி அழுத ஆனந்த் செல்வியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மணையில் சேர்த்தார். இதுகுறித்து போத்தனூர் போலீஸிலும் புகார் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications